Monday, April 24, 2006

அவள் கூந்தல் வாசம்!


பூக்களைப் பறித்தேன்
அங்கே கண்டதெல்லாம்
அவள் முகம்!

இரவுநேர வான் வெளியில்
கண்டேன்
அங்கேயும் அவள் முகம்!

கோயிலுக்குப் போனேன்
அங்கே ஓர் அதிசயம்
அம்மன் வடிவில் அவள் உருவம்...!

தனிமை கூட
இப்போது இனிக்கின்றது
அப்போது தான்

என்னருகில் அவள்!

வாசனையில் சிறந்த வாசனை
எதுவென்று என்னிடம் கேட்டால்.....
என் பதில்

அவள் கூந்தல்!

பசிக்கின்றது சாப்பிட
முடியவில்லை
என் கையில் அவள் வாசனை!

0 Comments:

Post a Comment

<< Home