Saturday, April 01, 2006

நடந்து வந்த பாதை.


நிலைகள் மாறுகின்ற இவ் உலகில்
நிலைத்து நிற்பவை தான் எத்தனை
நினைவில் உள்வவற்றை எண்ணிப் பார்த்தால்
நிறைவில் வரும் பதில் பூஜியமே!

நித்திய வாழ்க்கை பூவுலலில் இல்வே இல்லை
நித்திராதேவி நிரந்தரமாக அழைக்கும் வரை தான்
நிந்தனைகள் சிந்தனைகள் அனைத்தும்
நிரந்தரம் இல்லா வாழ்வு தான் எப்போதும் உன் கையில்!

நிர்மூலமாய் ஆகிவிட்ட உன் வாழ்வில்
நிர்மாண பணிகள் தான் எப்போது
நிவர்த்தி செய்திட தான் முடியுமா?
நிமிர்ந்து எழுந்திடுமோ உன் வாழ்வு!

நித்தம் சித்தம் பேதலித்து
நிபந்தனை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு
நிம்மதியான மனநிலை இல்லாது
நிர்கதியாகி விட்டாய் இப்போது

நில அதிர்வுகளுக்கு
நிதிகளை சேகரித்தாய்
நிவாரணங்கள் பலவும் செய்தாய்
நியதிகளை மாற்றியமைக்க உனக்கு என்ன தகுதி

நிலங்களுக்கு அதிபதியான உனக்கு
நிலமைகளை ஆராய ஏதிங்கே நேரம்
நிறுத்திவிடு உன் அதிகாரங்களை
நின்றுவிடும் வீண் விவாதங்கள் இங்கே

நிமிடங்கள் பல மில்லியன்கள் இறந்தும்
நிதர்சண உண்மைக்கு புறம்பாக நீ செயல்பட்டாய்
நியமனம் ஆகிவிடுவாய் பாவிகளின் பட்டியலில்
நியாயத் தீர்ப்புக்கு வெகுவிரைவில் ஆயுத்தமாகி விடு!

நிலவிலே கால் வைத்த மமதையில்
நினைவிழந்து ஆட்டம் போடுகின்றாய்
நிர்ணயம் தேவையில்லை பூமியில் ஈர்ப்பு எப்போதும் கீழ் நோக்கியே
நீ நீதி தேவதையில் முன் மனம் திரும்புவது எப்போது?

1 Comments:

Anonymous Anonymous said...

அழகான கவிதை றெனி

தொடர்ந்து எழுதுங்கள்

நேசமுடன்..
-நித்தியா

Tue Apr 18, 11:22:00 AM 2006  

Post a Comment

<< Home