Wednesday, February 01, 2006

இன்று முதல் காதலிக்கின்றேன்.



என் தாயிலும் மேலாய்
ஏன் என்னிலும் அதிகம்
என்னை பற்றி
அறிந்ததும் நீ தானே!

எத்தனை முறை உன்னை
கேலி செய்திருப்பேன்
முகம் ஏது மூக்கு ஏது
என்றே தெரியவில்லை
பரட்டை தலை
இன்னும்..எத்தனை, எத்தனையோ...

என்னைக் கேளாமலே
நித்தம் எனைத் தொடர்ந்தாய்
சல்லி காசுக்கு கூட
உன்னை நான் பார்த்தேனா?

பொறுமைக்கு பூமித்தாயை
உதாரணம் சொல்வர்
ஆனால் அது உண்மையில்லை
அது கூட தனது கோபத்தை
அதிர்ச்சியாக வெளிப்படுத்தும்

எப்படித்தான் உனக்கு
இத்தனை பொறுமை......?
அதிசயம் தான் ஆனாலும்
உண்மை அல்லவா!

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்
உனது காதலுக்கு
மொழி கூடக் கிடையாதே!
என்னை இன்று கிறுக்க வைத்ததும்
நீதானே!

ஆம் இன்று நீ எனது
கண்ணிற்கு தேவதை
உனது விரதம் வெற்றியே

உண்மை தான்
நான் எனது
நிழலை காதலிக்கின்றேன்!