Sunday, December 04, 2005

உன் அன்பை தந்துவிடு என்றும் எனக்கு!


அந்த நதிக்கரையோரம் நான்
நாணலாக பிறந்திருந்தால்
உன் ஆணையாகிய நதிக்குதலை
வணங்கியிருப்பேன்

மலையடிவாரத்தில் புல்லாக
நானிருந்திருந்தால்
தென்றாய் வரும் உன்
பாதங்களை வருடியிருப்பேன்

பூங்கொடியாக நானிருந்தால்
மரமாகிய உன்னைத்
தழுவிக்கொண்டே மேல் நோக்கி
வளர்ந்திருப்பேன்

முகிலாக அவன் என்னை
படைத்திருந்தால்
பூமியாகிய உன் வரட்சி கண்டு
மழையாக அழுதிருப்பேன்

ஆனால்..........
ஆணவம் உள்ள ஆண் மகனாக
பிறந்து விட்டேன்
நான் என்ன செய்வேன்

உன் அன்புக்காக ஏங்கினேன்
அதற்கு முன்னால்
எதுவுமே பெரிதாக தெரியவில்லை
பெண்ணே எனக்கு

மறுபடியும் நான் இந்த
உலகில் பிறந்திடுவேன்! என்றால்,
உன் உண்மையான அன்பை
எனக்காகத் தந்துவிடு
.

www.nilafm.com

0 Comments:

Post a Comment

<< Home