Tuesday, January 31, 2006

என்னை உயிர் வாழ விடு.


அன்புக்காக புகலிடம் தேடி
அலைகின்ற
இந்த அகதிக்கு
ஆதரவு கொடு!

நான் கோழை இல்லை
என்று எண்ணினேன்
உன்னைக் காணும் வரை!

இப்போது
உன்னிடம் ஓர் வேண்டுகோள்

உன் மூச்சுக் காற்றினை
சுவாசித்துத் தான்
இந்த ஜீவன் உயிர்
வாழ்கின்றது என்பதை
யாருக்கும் நீ சொல்லி விடாதே!

என்னுயிர் பிரியும்
தருணத்தில்
உன்னுயிர் கொஞ்சம் தந்து
என்னை உயிர் வாழ விடு..........

2 Comments:

Anonymous Anonymous said...

கிடைக்கும் பொருளுக்காய்
தவம் கிடபபோர் மத்தியில்
தொலைத்துப் போகும் - உனக்காக
தவம் கிடக்கிறேன்..

காதல் சுகமானதுதான் - ஆனால்
காதலர்களுக்கு அல்ல..!


அழகான கவிதை றெனி..
நேசமுடன்
-நித்தியா

Sun Feb 05, 12:14:00 AM 2006  
Blogger றெனிநிமல் said...

நன்றி நித்தியா உங்கள் பதிவிற்கு.

Fri Feb 10, 12:55:00 PM 2006  

Post a Comment

<< Home