Wednesday, January 11, 2006

நான் இறக்கும் வரை.......




பூக்கள் மலர்வது
உன்னைக் கண்டு!
நான் நித்தம் பிறப்பதும்
உன்னைக் கண்டு!

என்றுமே புன்சிரிப்பு
கண்டேன் உன் வதனத்தில்
ஒய்யாரத்தில் மறு பெயர்
நீயல்லவோ எனக்கு!

உன் மீது ஆசை
கொள்ளாதோர் தான்
இருக்க முடியுமா
இவ்வுலகத்தில்....?

நீ இல்லாத இரவுகள்
மகா கொடியவை
உன் செல்ல சினுங்கள்
தாலாட்டு பாட்டல்லவோ!

நித்தம் நித்தம் உன்
மேனி தொட்டு தொட்டு
என் கைகள் கூட
புனிதமாகி விட்டது!

எனக்கு மீண்டும்
ஓர்பிறவி இருந்தால்!
உன்னைப் போன்றே குழந்தையாக
பிறந்து இருந்திட வேண்டும்
நான் இறக்கும் வரை!

2 Comments:

Anonymous Anonymous said...

மீண்டும் மழலை மொழி
நான் பேச வேண்டும் !!
மறுபடியும் வெட்கம் என்றால்
என்ன என்று தெரியாத
நெஞ்சம் வேண்டும்.....!

நீ இல்லாத அந்த
பளைய மனசு வேண்டும் !!


nice..!!

Sun Jan 15, 02:10:00 PM 2006  
Blogger றெனிநிமல் said...

நன்றி நித்தியா.

Sat Jan 21, 05:28:00 AM 2006  

Post a Comment

<< Home