Sunday, February 05, 2006

நீ உணர்வாய்....!


நாடகம் முடிந்ததும் வேசத்தினை
கலைத்து விட...
வாழ்க்கை நாடக மேலையல்ல

உனக்கு கொடுக்க பட்ட பாத்திரம்
உன் உயிர் வரை ஒட்டியிருக்கும்
அது தானே நிஜம்!

நினைப்பதும் பின்னர் வெறுப்பது
உன் விருப்பம்
அதனால் பாதிக்கப் படுவது நீயில்லை தானே!

நீ பெண் என்பதால்
துயர்காட்டிடுவாய் கண்ணீரில்
ஆனால் ......
ஆண் என்ன செய்வான்?

என் மனம் அழுவது கூடவா
உன் செவிகளுக்கு கேட்கவில்லை!

என்றோ ஓர் நாள்
எனை நீ உணர்வாய்
அன்று உன் கைகளுக்கு
எட்டாத தூரத்தில் நட்சத்திரமான வானில் நான்!