Friday, February 10, 2006

வா மன்னவா.......!



கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் ஒன்று செய்வோம் வா!
இரவு பகல் பாராது
நித்தம் பல செய்வோம் வா!

இருவரும் வெற்றி கொள்ளும்
மோதல் விளையாட்டடா!
அது இங்கு மாத்திரம் தானடா!

என் கூந்தலின் மணம் அறிந்தவனே
மங்கை இவள் மனம் வென்றவனே
மெளனத்தின் மொழி தெரிந்தவனே
என்னையும் பாதியாகக் கொண்டவனே

உன் அனல் மூச்சுக் காற்று பட்டு
எரிந்திடுதே என் தேகமடா
அனலும் நெருப்பும் சேர்வோம் வாடா
என்னை எரித்து அணைக்க நீ வாடா

வா மன்னவா என்னை
அணைக்க வா மன்னவா?

என் கூந்தலில் உன் விரல்களால்
இசை மீட்டிட நீ வாடா
வந்து சுதி ஏற்றடா
ஏற்றி எனை மீட்டு போடா.

மார்பு அகன்ற வீரனடா
ஆண் மகன் நீ தானடா
அல்லி இவளை அள்ளிக் கொள்ளடா
கொன்று கொண்டு செல்லடா!

www.nilafm.com