Thursday, April 20, 2006

மனிதனுக்கு நிகர் மனிதனே!



நீதி தேவதையின் கண்களைக் கட்டி
தனக்கு சாதகமாக
நீதிகளை அமைப்பதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே!

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தால்
அது குற்றம் என்றால்
வளர்ந்த கிடாவின் கழுத்தில்
கத்தி வைப்பது எவ்வகையில்
நியாயம்?

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்றான் பாரதி
ஜாதிகள் இல்லை என்றால்
நாம் இல்லை என்றான் அரசியல்வாதி!

கூன் குருடு செவிடு இல்லாமல்
பிறப்பது அரிது என்றாள் ஒளவை
இவர்கள் இல்லை என்றால்
நான் எப்படி என்றான் நடிகன்!

கடவுள் பெயரை சொல்லி
காவு கொடுத்து படையல் படைத்து
தன் வயிற்றை நிரப்புகின்றான்
அவன் பெயர் பூசாரி!

நீதி தேவதையின் கண்களைக் கட்டி
தனக்கு சாதகமாக
நீதிகளை அமைப்பதில்
மனிதனுக்கு நிகர் மனிதனே!

0 Comments:

Post a Comment

<< Home