Tuesday, April 18, 2006

என்னுயிர் நீயம்மா!



லட்சியம் இல்லாமல்
பிறந்து விட்டேனோ
என்று எண்ணினேன்
உன்னைக்காணும் வரையம்மா.

அரண்மனை
வாசம் கூட
நீ இல்லை என்றால்
அகதி வாழ்க்கை தானம்மா!

இரவு நேரத்திலும்
உனை சுற்றி வரும்
நிழல் நானென
அறிவாயோம்மா!

உன் படம்
வரைகையில்
இடை நடுவே தூரிகை
முறிந்ததென்னம்மா!

உன்னை நான்
பிரிகையில்
தாயின் பிரசவ வேதனையை
உணர்கின்றேனம்மா!

ஒன்று மாத்திரம் உண்மை
உன் நினைவுகளில் தான்
என் உயிர்
வாழ்கின்றதம்மா!



0 Comments:

Post a Comment

<< Home