Saturday, November 04, 2006

உலகமே நீ தான்.


தாய் மடி இருக்கும் வரை
தலையணை கடினமானது!

தந்தை உழைப்பு இருக்கும் வரை
பிள்ளைகள் சீமான்கள்!

வாலிபம் இருக்கும் வரை
ஆண்கள் வீரமானவர்கள்!

இளமை இருக்குவரை
பெண்கள் அழகானவர்கள்!

மழலை மொழி பேசும்வரை
அனைவரும் குழந்தைகள்!

தூய அன்பு இருக்குவரை
காதல் புனிதமானவை!

என்னோடு நீயிருக்கும்வரை
உலகமே நீ என்றானது.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home