Monday, October 30, 2006

நீதானா நீதானா!!!!




நீயா இன்று எனை
விட்டுச் சென்றாய்?

அன்று சூரிய உதயமும்
நிலவின் அடியெடுப்பும்
எம் உறவில் தானே
ஆரம்பம்!

இரவும் பகலும்
இணைவது எம்
உறவால் தானே
கண்மணியே!

கடிகார முள் கூட
நகராமல் இருந்திருக்கும்
காதலியே உனை நினையாமல்
நானிருந்ததில்யே!

இன்று சூரியகிரகனம்
சந்திரகிரகனம்
ஒன்றாய் வந்தது
என் வானில்!

இதற்கு என்ன கிரகனம்
என்று சொல்லியழைக்க?
பெயர் தெரியாததால்
வைத்தேன் என் பெயரை!


உ(எ)ன்னால் எனக்கிங்கே
இன்னல்கள் பல
சத்தியம் மீறியதால் வந்ததா?
இல்லை விதி தானோ இவை
எல்லாம்!


நீயா இன்று என்னை
விட்டுச் சென்றாய்?

Labels:

0 Comments:

Post a Comment

<< Home