காத்திருக்கின்றேன் மீண்டும் மரணிக்க....

எல்லோருக்கும் பிறவி
என்பது ஓர் முறை தான்
ஆனால் எனக்கோ
இரு முறை அல்லவோ!
உன்னைப் பார்த்த முதல் நாள்
நான் மீண்டும் பிறந்தேன்
புது பூமி புது வானம்
அனைத்தும் எனக்கு புதியவை ஆனாது
நீ மாத்திரம்
எனக்கு
ஆதிமுதல் கொண்ட
நேசமானாய்!
ஆனாலும் இன்று
என் வாக்கு மீறி
பாதிவழியில் பரிதவிக்க விட்டு
நீயும் சென்றாய்!
இன்று முதல் முறையாக
நானும் தான் இறக்கின்றேன்!
காத்திருக்கின்றேன்.....
மீண்டும் ஓர் முறை
மரணிக்க!
0 Comments:
Post a Comment
<< Home