Wednesday, October 31, 2007

உன் ஞாபகம்.





கண்ணுறங்க முடியவில்லை
கண்மணி உன் ஞாபகம்
கடல் கடக்கவும் முடியவில்லை
கல்க்கண்டே உன் ஞாபகம்

கவிதை கூட எழுதமுடியவில்லை
காவியமே உன் ஞாபகம்
கடவுளையும் தேடமுடியவில்லை
காரிகையே உன் ஞாபகம்

சிந்தனை ஒரு நிலையில்லை
சித்திரமே உன் ஞாபகம்
சிகரமும் ஏறமுடியவில்லை
சீமாட்டியே உன் ஞாபகம்

பசிக்கின்றது உண்ணமுடியவில்லை
பைங்கிளியே உன் ஞாபகம்
பட்டணமும் பார்க்கமுடியவில்லை
பைந்தமிழே உன் ஞாபகம்


தேவைகள் எதுவுமில்லை
தேவதையே உன் ஞாபகம்
தேடியும் எதுவும் கிடைக்கவில்லை
தேவியே உன் ஞாபகம்

வாசனைகளை உணரமுடியவில்லை
வஞ்சியே உன் ஞாபகம்
வடக்கேது தெற்கேது தெரியவில்லை
வட்டநிலவே உந்தன் ஞாபகம்

3 Comments:

Blogger தயா said...

இப்படியே போச்சு நீங்க யாரென்கிறதயே மறந்திடுவிங்க போங்க. நல்லா இருக்கே

Sat Nov 03, 02:07:00 AM 2007  
Blogger இறக்குவானை நிர்ஷன் said...

மோனை நயத்தில் எழுதியுள்ள வரிகள் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Tue Nov 13, 09:48:00 PM 2007  
Blogger Learn said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Wed Nov 23, 11:28:00 PM 2011  

Post a Comment

<< Home